ரூபாய் நோட்டுகளில் சுதந்திரப் போராட்ட தலைவர்களின் படங்கள் - முன்வைக்கப்படும் முக்கிய கோரிக்கை!
ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்துடன் சுதந்திரப் போராட்ட தலைவர்களின் படத்தையும் அச்சிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் அளித்த பரிந்துரைக்கு, ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி பதிலளித்துள்ளது. கடந்த சில நாட்களாக ரூபாய் நோட்டுக்களில் ரவீந்திரநாத் தாகூர், அப்துல்கலாம் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படத்தை அச்சிட வேண்டும் என்ற கோரிக்கையை ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது.
தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவர்,சுதந்திரத்திற்காக போராடிய மற்ற தலைவர்களின் புகைப்படத்தையும் அச்சிட வேண்டும் என வெளிநாட்டு பணத்துடன் ஒப்பிட்டு ஆதாரப்பூர்வமாக ரிசர்வ் வங்கிக்கு 149 பக்கங்கள் கொண்ட பரிந்துரையை நித்யானந்தம் அனுப்பியிருக்கிறார்.
இந்தஅவரது பரிந்துரையை பெற்றுக் கொண்ட ரிசர்வ் வங்கி அவருக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளதோடு, இது குறித்து ஆலோசனை நடத்திய நடத்தி முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளது.
Inputs From: News 18