கிராம மக்களுடன் எளிமையாக பொங்கல் திருநாளை கொண்டாடிய முதலமைச்சர்.!
கிராம மக்களுடன் எளிமையாக பொங்கல் திருநாளை கொண்டாடிய முதலமைச்சர்.!
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள சப்பாணிப்பட்டியில் கிராம மக்களோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் திருநாளை கொண்டாடினார்.
இன்று தைதிருநாளை முன்னிட்டு பொங்கல் விழா தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடினார்கள். அதே போன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலை சென்னையில் காவல்துறையினருடன் பொங்கல் விழாவை கொண்டாடினார். அதன் பின்னர் அவரது சொந்த மாவட்டத்திற்கு வருகை புரிந்தார்.
அப்போது எடப்பாடி அருகே உள்ள சப்பாணிப்பட்டியில் கிராம மக்களோடு எளிமையாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். இதன் பின்னர் அவர்களுடன் அமர்ந்து உணவும் அருந்தினார். இது பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் சாதாரண கிராம மக்கள் போன்று தோற்றம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.