சட்டசபையில் வ.உ.சிதம்பரனார் உட்பட 3 தலைவர்களின் படங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.!

சட்டசபையில் வ.உ.சிதம்பரனார் உட்பட 3 தலைவர்களின் படங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.!

Update: 2021-02-23 19:23 GMT

தமிழக சட்டசபை மண்டபத்தில் இதற்கு முன்னரே திருவள்ளுவர், பெரியார், காமராஜர் மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் உட்பட 12 தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேலும் கூடுதலாக 3 தலைவர்களின் படங்களை சட்டசபையில் வைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதன்படி வ.உ.சிதம்பரனார், பி.சுப்பராயன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் முழு உருவ படங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதில் சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News