597 மருத்துவ இடங்களுக்கு இன்று முதல் கலந்தாய்வு தொடக்கம்.!

597 மருத்துவ இடங்களுக்கு இன்று முதல் கலந்தாய்வு தொடக்கம்.!

Update: 2021-01-30 11:01 GMT

அரசு சுயநிதி கல்லூரிகளில் காலியாக உள்ள 597 மருத்துவப் படிப்புக்களுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு நடுவில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி தொடங்கியது. அப்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மற்ற பிரிவினருக்கும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், காலியாக உள்ள 138 எம்.பி.பி.எஸ்., 459 பி.டி.எஸ். இடங்களை சேர்த்து 597 இடங்களுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு இன்று முதல் தொடங்கி அடுத்த மாதம் பிப்ரவரி 1ம் தேதிவரை நடைபெறுகிறது

Similar News