தமிழகத்தில் 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்.. முதலமைச்சர் அறிவிப்பு.!

தமிழகத்தில் 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்.. முதலமைச்சர் அறிவிப்பு.!

Update: 2021-01-12 09:54 GMT

கொரோனா தொற்று காரணமாக கடந்த 9 மாதங்களாக பூட்டப்பட்டிருந்த பள்ளிகள் மீண்டும் ஜனவரி 19 முதல் 10,12ஆம் வகுப்புகளுக்கு திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஜனவரி 19 முதல் 10, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஒரு வகுப்பறையில் 25 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதிமுறைகமை அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிக்கு வரும் மாணவர்ளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்துள்ளனர். அதுவும் தேர்வுக்கு இன்னும் குறைந்த மாதங்களே உள்ள நிலையில் மாணவர்களுக்கு பாடங்கள் விரைவாக நடத்தப்படும் என கூறப்படுகிறது.


 

Similar News