தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை - விநாயகர் சதுர்த்தியை பிரமாண்டமாக திட்டமிடும் இந்து முன்னணி
ஒரு லட்சம் இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலையை வைக்க இந்து முன்னணி அதிரடியாக திட்டமிட்டுள்ளது.
ஒரு லட்சம் இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலையை வைக்க இந்து முன்னணி அதிரடியாக திட்டமிட்டுள்ளது.
திண்டுக்கல் பாரதிபுரத்தில் நடந்த ஹிந்தி முன்னணி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய இந்து முன்னணி மதுரை கோட்ட செயலாளர் சங்கர் கணேஷ் கூறியதாவது, 'ஆகஸ்ட் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகள் தமிழகத்தில் ஒரு லட்சம் இடங்களில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்து வழிபட உள்ளோம். பிரிவினைவாதத்தை தவிர்ப்போம் தேசிய சிந்தனை வளர்ப்போம் என்ற தலைப்பில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
திண்டுக்கல்லில் 51 இடங்களில் விநாயகர் சிலை வைத்து 11 இடங்களில் ஊர்வலமும் நடக்கும், மூன்று அடி முதல் 12 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படும்' என தெரிவித்தார்.