இன்று முதல் கீழமை நீதிமன்றங்கள் முழுஅளவில் இயங்கும்!

இன்று முதல் கீழமை நீதிமன்றங்கள் முழுஅளவில் இயங்கும்!

Update: 2021-01-18 10:36 GMT

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையுடன் இன்று முதல் முழு அளவில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்தும் மூடப்பட்டு, காணொலிக் காட்சி மூலம் அவரச வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தற்போது நாடு முழுவதும் கொரோவா வைரஸ் தொற்று குறைந்து வருகிறது. தடுப்பூசியும் முன்களப் பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடத்த நிர்வாகக் குழு கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நீதித்துறை நடுவர் மன்றம், உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆகியவை முழு அளவில் இன்று முதல் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் நீதிமன்றங்கள் திறக்கப்படுவதால் வழக்குகள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது.
 

Similar News