நெல்லை காப்பகத்தில் பெண் ஊழியருடன் உல்லாசமாக இருந்த பாதிரியார்.. நேரில் பார்த்த சமையல்கார பெண்ணுக்கு நேர்ந்த கதி..

நெல்லை காப்பகத்தில் பெண் ஊழியருடன் உல்லாசமாக இருந்த பாதிரியார்.. நேரில் பார்த்த சமையல்கார பெண்ணுக்கு நேர்ந்த கதி..

Update: 2021-01-30 11:30 GMT

நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள காப்பகம் ஒன்றில் பாதிரியார் பெண் ஊழியருடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த சமையல்கார பெண்ணை கொலை வெறியுடன் தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம், பணகுடி அருகே உள்ளது ரோஸ்மியபுரம் என்ற ஊர். இந்த ஊரில் ஹெர் மைன்ஸ் என்ற பெயரில் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் முதியோர்கள் மற்றும் இளைய சமூகத்தினர் உள்ளிட்டோர் என 30க்கும் மேற்பட்டோர் வசித்து வந்துள்ளனர். இதனை ஜோசப் ஈஸிதோர் என்ற பாதிரியார் நிர்வாகம் செய்து வருகிறார். இந்த காப்பகத்தில் ராஜம்மாள் என்ற பெண் சமையல் வேலை பார்த்து வந்திருக்கிறார்.

இந்நிலையில், பாதிரியார் ஜோசப்புக்கும் அங்கு வேலை பார்த்து வந்த ஜெயலெட்சுமி என்பவருக்கும் கள்ள உறவு இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 25ம் தேதி காப்பகத்தில் உள்ள ஒரு அறையில் ஜோசப்பும், ஜெயலெட்சுமியும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை எதிர்பாராதவிதமாக ராஜம்மாள் பார்த்துள்ளார். இதனை தொடர்ந்து ஜோசப் ஈஸி தோர் மற்றும் ஜெயலெட்சுமியும் சேர்ந்த ராஜம்மாள் மீது பயங்கரமாக தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்களிடம் இருந்து தப்பித்த ராஜம்மாள் ராதாபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இது பற்றிய தகவல்களை மருத்துவர்கள் போலீசாருக்கு அளித்தனர். தகவல் அறிந்து வந்த ராதாபுரம் எஸ்.ஐ. சிவபெருமாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ராஜம்மாளிடம் விசாரணை நடத்தினார். ஜோசப்பும், ஜெயலெட்சுமி தனிமையில் இருப்பதை பார்த்தாகவும், இதன் காரணமாக அவர்கள் தாக்கியதாகவும் கூறினார்.

இதனையடுத்து ஜோசப் மற்றும் ஜெயலெட்சுமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லை மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News