ஜெகத் கஸ்பர் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசுகிறார் - களமிறங்கிய வி.ஹெச்.பி

ஜெகத் கஸ்பர் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசுகிறார் என விஷ்வ ஹிந்து பரிஷத் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2022-06-29 10:56 GMT

ஜெகத் கஸ்பர் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசுகிறார் என விஷ்வ ஹிந்து பரிஷத் கண்டனம் தெரிவித்துள்ளது.

மதக் கலவரத்தை தூண்டி நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் விதமாக பேசிய பாதிரியார் ஜெகத் கஸ்பர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் தமிழ்நாடு மாநில இணை பொது செயலாளர் சந்திசேகரன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் அவர் கூறியதாவது, 'ஜனவரி 19ஆம் தேதி சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜெகத் கஸ்பர் ஆதி தமிழர்கள், முஸ்லிம்கள் 40 சதவீதம் வாழ்கிறார்கள் இந்தியா அவர்களுக்கு துரோகம் செய்வதால் நிலத்தில் 40 சதவீதை பிரித்து வாங்குங்கள். இல்லையெனில் 20% முஸ்லிம்கள் சகாரா பாலைவனத்தை வாங்குங்கள். இந்தியா உங்களை பகையாக சொல்வதால் பாதுகாப்பை பலப்படுத்துங்கள் வெளிநாடுகள் ஆதரவு வாங்குவோம்' என பேசினார்.

முஸ்லிம்கள், தமிழர்களை தூண்டிவிட்டு நாட்டின் அமைதியை சீர்குலைக்க நினைக்கும் ஜெகத்கஸ்பர் மீது நாட்டின் இறையாண்மை அரசியலமைப்பிற்கு மாறாக மதம் இனம் கலவரம் உருவாக்கும் நோக்கில் பேசிய அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது.



Source - Dinamalar

Similar News