விவசாய நிலங்களை போர்த்திய வெள்ளை கம்பளம்! பனி படர்ந்த ரம்மியமான காட்சி!

விவசாய நிலங்களை போர்த்திய வெள்ளை கம்பளம்! பனி படர்ந்த ரம்மியமான காட்சி!

Update: 2021-01-27 17:38 GMT
ஊட்டியில் மீண்டும் துவங்கிய உறைபனி காலம் புல்வெளிகள் விவசாய நிலங்கள் மீது வெள்ளைக் கம்பளம் போர்த்தியது போல் உறைபனி காணப்பட்டது. நீலகிரியில் ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் துவங்கும் உறை பணியின் தாக்கம் ஜனவரி இறுதி வரை காணப்படும். உறை பணியின் தாக்கம் காரணமாக புல்வெளிகள் விளைநிலங்கள் உள்ளிட்டவை கருகும் நிலை ஏற்படும்.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உரை பனியின் தாக்கம் காணப்பட்டு வந்த நிலையில் இடைப்பட்ட நாட்களில் நீர் பனியும் மழையும் காணப்பட்டதால் உறைபனி குறைவாக காணப்பட்டது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களில் இன்று உறை பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

குறிப்பாக உதகை நகரில் குதிரைப்பந்தய மைதானம், காந்தல் , தலைகுந்தா பகுதி, அரசு தாவரவியல் பூங்கா, உள்ளிட்ட பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் புல் மைதானங்கள் மற்றும் விளை நிலங்களின் மீது உறை பனி படர்ந்து வெள்ள கம்பளம் போல் காட்சியளித்தது.

தற்போது அதிகாலை 6 மணி முதல் 11 மணி வரை இந்த உரை பனியின் தாக்கம் காணப்பட்டு வருவதால் கடும் குளிரும் நிலவி வருகிறது இதனால் ஜீரோ டிகிரி வெப்பம் ஊட்டியில் காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது. 

Similar News