திருவள்ளூர்: கோயில் சிலைகளை திருடி விற்க முயன்ற 7 பேர் கைது.!

திருவள்ளூர்: கோயில் சிலைகளை திருடி விற்க முயன்ற 7 பேர் கைது.!

Update: 2021-02-01 19:04 GMT

திருவள்ளூர் அருகே கோயில் சிலைகளை திருடிச்சென்று கேரளாவில் விற்க எடுத்துச்சென்ற போது 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் அன்னதான காக்கவாக்கம் என்ற ஊரில் சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. அந்த கோயிலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3 சிலைகள் காணாமல் போயிருந்தது.

இந்நிலையில், நேற்றிரவு பெரியபாளையம் கூட்டுச்சாலையில் போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகித்துக்கு இடமாக வந்த 7 பேரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குபின்னாக பதில் அளித்தனர்.

இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள்தான் சிலைகளை திருடிச் சென்றவர்கள் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். 

Similar News