உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 9 கோடியே 45 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதே போன்று 20 லட்சத்துக்கும் அதிகமானோர்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 30 ஆயிரத்து 772ஆக உயர்ந்துதுள்ளது. இன்று மட்டும் மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் தனியார் மருத்துவமனையிலும், 2 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.