இன்றைய கொரோனா நிலவரம் மாவட்ட வாரியாக.!

இன்றைய கொரோனா நிலவரம் மாவட்ட வாரியாக.!

Update: 2021-01-08 19:21 GMT

கொரோனா வைரஸ் தொற்று தற்போது குறையத் தொடங்கியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளால் பெரிதும் நோய் பரவல் தடுக்கப்பட்டுள்ளது. 

ஆரம்ப கட்டத்தில் பாதிப்பு தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தது. இதனால் மாநில அரசு கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தியது. இதனால் வைரஸ் தொற்று பரவுவதை முன்கூட்டியே கண்டறியப்பட்டு அவர்களுக்கு போதிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இதனால் கொரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்நிலையில், இன்று தமிழகத்தின் பாதிப்புகள் மாவட்ட வாரியாக அரசு வெளியிட்டுள்ளது.

அதில் சென்னையில் 208 பேர் பாதிப்பு, அரியலூர் 4, செங்கல்பட்டு 58, கோவை 79, கடலூர் 8, தருமபுரி 6. திண்டுக்கல் 14, ஈரோடு 18, கள்ளக்குறிச்சி 5, காஞ்சிபுரம் 31, கன்னியாகுமரி 18, கரூர் 9, கிருஷ்ணகிரி 8, மதுரை 23, நாகப்பட்டினம் 11, நாமக்கல் 20, நீலகிரி 10, புதுக்கோட்டை 5. ராமநாதபுரம் 4, ராணிப்பேட்டை 13, சேலம் 25, சிவகங்கை 7, தென்காசி 5, தஞ்சாவூர் 10, தேனி 7, திருப்பத்தூர் 8, திருவள்ளூர் 32, திருவண்ணாமலை 9, திருவாரூர் 15, தூத்துக்குடி 7, திருநெல்வேலி 12, திருப்பூர் 34, திருச்சி 19, வேலூர் 27, விழுப்புரம் 10, விருதுநகர் 9, பெரம்பலூரில் பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News