போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்.. பேச்சுவார்த்தையில் உடன்பாடு.!
bus transport strike
தமிழ்நாடு போக்குவரத்து கழக ஊழியர்களில் ஒரு சில அமைப்பை சேர்ந்தவர்கள் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர்.
இதனிடையே பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிலாளர் நலத்துறை இணையர் லட்சுமிகாந்தன் அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி போக்குவரத்து ஊழியர்கள் கலந்து கொண்டனர். அப்போது தொழிற்சங்கங்கள், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கோரிக்கைள் ஏற்கப்பட்டன.
இதனையடுத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. இதனால் நாளை முதல் வழக்கமான பேருந்துகள் ஓடத்தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.