தமிழகத்தில் 1.86 கோடி பேருக்கு தடுப்பூசி! கலெக்டர் கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு!

தமிழகத்தில் 1.86 கோடி பேருக்கு தடுப்பூசி! கலெக்டர் கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு!

Update: 2021-01-29 17:28 GMT

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பேசினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் தற்போது மேலும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா பரிசோதனை செய்வதற்காக அதிகப்படியான ஆய்வகம் அமைக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. மற்ற மாநிலங்களில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் எந்த காரணத்திற்காகவும் தமிழகத்தில் பரிசோதனைகள் குறைக்கப்படவில்லை.

சென்னையை பொறுத்தவரையில் மண்டலத்திற்கு ஒரு அமைச்சர் போடப்பட்டு, அவர்கள் கண்காணித்து வருகின்றனர். தமிழகத்தை போன்று மற்ற மாநிலங்களிலும் கொரோனா பரிசோதனை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தியுள்ளார் எனக்கூறினார்.

மேலும், தற்போது வரை 4,729 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் 1.86 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Similar News