தடுப்பூசி போடுபவர்கள் 28 நாட்கள் மது அருந்தக்கூடாது.. அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.!
தடுப்பூசி போடுபவர்கள் 28 நாட்கள் மது அருந்தக்கூடாது.. அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.!
கொரோனா தடுப்பூசி போடுவதற்காக 2 கட்ட ஒத்திகைகள் தமிழகத்தில் நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து தடுப்பு மருந்துகள் நேற்று சென்னை வந்தடைந்தது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் முன்களப்பணியாளர்களுக்கு முதற்கட்டமாக போடப்படும் என்று அரசு கூறியிருந்தது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி குறித்து திருச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில்: கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது.
அதே போன்று 2வது டோஸ் போடும் வரையில் 28 நாட்களுக்கு மது அருந்தக்கூடாது.
தடுப்பூசி போட்ட 42 நாட்களுக்கு பின்னரே நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
கொரோனா தடுப்பூசி போடுபவர்களை தனிமைப்படுத்த வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.