ரூ.2500க்கு ஆசைப்பட்டு கைதான கிராம நிர்வாக அலுவலர்.!

ரூ.2500க்கு ஆசைப்பட்டு கைதான கிராம நிர்வாக அலுவலர்.!

Update: 2020-12-17 11:26 GMT

வேலூர் அருகே பட்டா மாற்றம் செய்வதற்கு ரூ.2,500 லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் ரேவதி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சக ஊழியர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், அணைகட்டு தாலுக்கா இலவன்பாடி கிராமத்தில் வசித்து வருபவர் நடராஜ். இவருக்கு சொந்தமான நிலத்தில் பட்டா, அவரது உறவினரின் பெயரில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பட்டாவை மாற்றம் செய்வதற்கு அப்பகுதி கிராம நிர்வாக அலுவலரான ரேவதியை அணுகியுள்ளார்.

அப்போது ரேவதி, ரூ.2,500 லஞ்சம் கொடுத்தால் பட்டா மாற்றம் செய்து தருவதாக கூறியுள்ளார். அதனை கொடுக்க முடியாவிட்டால், பட்டா மாற்றம் செய்ய முடியாது என ரேவதி திட்டவட்டமாக கூறியுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து பணத்தை கொடுக்க ஒப்புக் கொண்ட நடராஜ், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து நடராஜனிடம் ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து அனுப்பிய போலீசார், ரேவதி அந்த பணத்தை பெறும் போது கையும் களவுமாக கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அரசு பணியில் உள்ளவர்கள் இது போன்று லஞ்சம் பெறுவது, அரசின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News