வாக்காளர் அட்டை அஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ளலாம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்.!

வாக்காளர் அட்டை அஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ளலாம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்.!

Update: 2021-02-05 18:53 GMT

தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் வேகமாக செய்து வருகிறது.

அதன் முதலாவது வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், விலாசம் மாற்றுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது. அதில் புதியதாக சேர்ந்த வாக்காளர்களும் உண்டு.

இந்நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 21 லட்சத்து 39 ஆயிரம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் விரைவு அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும் எனத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரத சாகு தெரிவித்துள்ளார். இதற்காக அஞ்சல் துறையுடன் தேர்தல் ஆணையம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Similar News