லஞ்சம் வாங்கும் ஊழியர்களுக்கு ஆப்பு.. மின்சார வாரியம் அதிரடி உத்தரவு.!

லஞ்சம் வாங்கும் ஊழியர்களுக்கு ஆப்பு.. மின்சார வாரியம் அதிரடி உத்தரவு.!

Update: 2020-12-22 17:56 GMT

மின் தடைகளை சரி செய்ய வரும் பணியாளர்கள் யாரேனும் பணம் கேட்டால் பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏதேனும் தளவாட சாமான்கள் வாங்க வேண்டும் என்று பணியாளர்கள் பணம் கோரினால் சென்னை அண்ணா சாலையிலுள்ள மின்சார வாரிய விழிப்புப் பணி அலுவலரிடம் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செலுத்த வேண்டிய தொகை எதுவாயினும் உரிய ரசீது பெற்று நேரடியாகவோ, இணையதளம் வாயிலாகவோ செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மின்சார வாரியத்துக்கு நன்றி தெரிவித்துள்ளனர். ஒரு சில இடங்களில் பணம் கொடுத்தால்மட்டுமே மின் தொடர்பான பணிகளை செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News