ஏசுவை போல் மீண்டும் உயிர்த்தெழுவார்.. இறந்த உடலுடன் 20 நாள் ஜெபம் செய்த குடும்பம்.. திண்டுக்கல்லில் பரபரப்பு.!
ஏசுவை போல் மீண்டும் உயிர்த்தெழுவார்.. இறந்த உடலுடன் 20 நாள் ஜெபம் செய்த குடும்பம்.. திண்டுக்கல்லில் பரபரப்பு.!
திண்டுக்கல் அருகே உயிரிழந்த பெண் காவலர், ஏசு கிறிஸ்துவைப் போன்று மீண்டும் உயிர்த்தெழுந்து வருவார் என்ற நம்பிக்கையில் அவரது குடும்பத்தினர் கிட்டத்தட்ட 20 நாட்களாகப் பூட்டிய வீட்டுக்குள் உடலுடன் ஜெபம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த அன்னை இந்திரா என்பவர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணியாற்றி வந்தார். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு பால்ராஜ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இந்திரா கிறிஸ்தவராக மதம் மாறியுள்ளார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பால்ராஜ் இந்திராவைப் பிரிந்து சென்றுள்ளார். இதனையடுத்து இந்திரா, திண்டுக்கல் நந்தவனப்பட்டி ட்ரசரி காலனி பகுதியில் தனது இரண்டு குழந்தைகளுடன் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 7ம் தேதி அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து அவரது சகோதரி சகுந்தலா என்பவர் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். இந்த நேரத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அன்னை இந்திரா உள்ளிட்ட யாரும் வீட்டை விட்டு வெளியே வராத காரணத்தினால், விருப்ப ஓய்வுக்கான ஆணையை வழங்குவதற்காக பெண் காவலர் ஒருவர் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். வீட்டின் கதவு திறக்கப்படாத நிலையில், துர்நாற்றம் வீசியதை அறிந்த அவர் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தார்.