பொதுத்தேர்வு இந்த ஆண்டு நடைபெறுமா.. பள்ளிக்கல்வித்துறை பரபரப்பு தகவல்.!

பொதுத்தேர்வு இந்த ஆண்டு நடைபெறுமா.. பள்ளிக்கல்வித்துறை பரபரப்பு தகவல்.!

Update: 2021-01-13 19:46 GMT

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச மாதம் மூடப்பட்ட பள்ளிக், கல்லூரிகள் இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை. தற்போது வரையில் மாணவர்களுக்கு ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகிறது. காலாண்டுத்தேர்வு, அரையாண்டுத்தேர்வு நடைபெறவில்லை. தற்போது முழு ஆண்டுத்தேர்வு விரைவில் வரபோகிறது.

இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், பிற ஆண்டு மாணவர்களுக்கும் ஆன்லைன் வாயிலாக பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தக்கூடிய சூழலே தற்போது நீடிக்கிறது. 

இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டதை போல பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், வருகின்ற பொதுத்தேர்வு பற்றி யாருக்கும் அச்சம் தேவையில்லை எனவும், பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. மேலும், 10, 12 ம் வகுப்பில் குறைக்கப்பட்ட பாடத்திட்ட அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News