கண்ணாடி பெட்டிக்குள் யோகாசனம்.. சாதனை படைத்த விருதுநகர் சிறுமி.!
கண்ணாடி பெட்டிக்குள் யோகாசனம்.. சாதனை படைத்த விருதுநகர் சிறுமி.!
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 வயது மாணவி, கண்ணாடி மீன் தொட்டிக்குள் 10 நிமிடம் கண்ட பேரண்டாசம் செய்து ஆஸ்கர் வேல்டு ரெகார்ட் சாதனை படைத்துள்ளார்.
கொடிக்குளம் பகுதியை சேர்ந்த சீன்ராஜ், கண்ணாத்தாள் தம்பதியின் பத்து வயது மகள் யோகாவீணா. கண்ணாடி மீன் தொட்டி மூடிய நிலையில், கண்ட பேரண்டாசனாவை பத்து நிமிடம் செய்து குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு எனும் சாதனையாளர் சான்றிதழ் மற்றும் பதக்கத்தை பெற்றார். இதற்கு முன்பு 8 நிமிடம் மட்டுமே இந்த சாதனை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
தற்போது அந்த சிறுமிக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.