கிறிஸ்தவர்களின் மூடநம்பிக்கையால் பறிபோகும் குழந்தைகளின் உயிர்!

Update: 2021-04-08 06:07 GMT

கிறிஸ்தவர்களின் மூட நம்பிக்கை காரணமாக குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாததால் நோய்வாய்பட்ட குழந்தைகள் பலர் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


பொதுவாக ஒருவருக்கு நோய்வாய்ப்பட்டால் அதற்கு தகுந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும். அது எந்த சிகிச்சையாக இருந்தாலும் சரி. சிகிச்சை எடுத்துக் கொண்டால் மட்டுமே அந்த நோயிலிருந்து ஒருவர் குணம் அடைய முடியும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் நோய்வாய்ப்பட்டவர்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டால் அது கடவுளுக்கு விரோதமாகும் என்று பைபிள் கூறுகிறது என்று கிறிஸ்தவர்களின் ஒரு பகுதியினர் மூடநம்பிக்கையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.

இவர்களுக்கு நோய்வாய்ப்பட்டால் அவர்கள் முதலில் செல்வது இவாஞ்சலிட்டுகளால் நடத்தப்படும் அற்புத சுகமளிக்கும் கூட்டத்திற்கே அவர்களை கூட்டிச் செல்ல வேண்டும் என்று அவர்களை பல்வேறு கிறிஸ்தவ மிஷினரி அமைப்புகள் கட்டாயப்படுத்துகின்றன.

இவாஞ்சலிட்டுகளைப் பொறுத்தவரை நோய் என்பது கெட்ட அசுத்த ஆவிகள் மற்றும் சாத்தான்களால் ஏற்படும் உபாதை என்று கிறிஸ்தவ மிஷனரிகள் அப்பாவி மக்களிடம் பயத்தினை ஏற்படுத்தியுள்ளனர். இது போன்ற நோய்களை கடவுளின் கிருபை மூலமாகவே குணப்படுத்த வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

இதனால் கொடிய நோய்களால் பாதிக்கப்படும் அப்பாவி மக்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியாமல் நோயின் பிடியில் சிக்கி தினம் தினம் அவதிப்பட்டு வருகின்றனர். இதில் ஆச்சரியமூட்டும் தகவல் என்னவென்றால் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட இவாஞ்சலிட்டுகள் இது போன்ற மூடநம்பிக்கைகளில் மக்களை தள்ளியுள்ளனர்.

இது குழந்தைகளுக்கு இன்னும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் இதுபோன்ற மூட நம்பிக்கையான இவாஞ்சலிஸ்டுகளிடம் அழைத்துச் சென்று பாட்டு பாடுங்கள் சரியாகிவிடும் சீடியை தொடுங்கள் சரியாகிவிடும் என்று ஏமாற்றி வருகின்றனர்.

அண்மையில் தமிழகத்தில் கூட இப்படி ஒரு சம்பவம் நடந்தது. காவல் துறையில் பணிபுரிந்து வந்த பெண்மணி ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் படுத்த‌ படுக்கையாகி விட்டார். அவர் மதம் மாறிவிட்டதால் மனக் கசப்பு ஏற்பட்டு கணவர் பிரிந்து சென்று விட இரண்டு குழந்தைகளுடன் தனது சகோதரி வீட்டில் வசித்து வந்துள்ளார். உடல் நிலை மிக மோசமான போதும் மதம் மாற்றிய மத போதகரின் 'அறிவுரையால்' அவருக்கு மருத்துவ உதவி அளிக்காமல் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருந்து ஜெபம் செய்து வந்துள்ளனர்.

இறுதியில் நோய் முற்றி அவர் இறந்து விட மத போதகர் அவர் மீண்டு வருவார் என்றும், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் இயேசு தண்டித்து விடுவார் என்றும் நரகத்திற்குத் தான் போவீர்கள் என்றும் சகோதரியையும் குழந்தைகளையும் அச்சுறுத்தி, இறந்த உடலுடனே வசித்து, உணவு உண்டு, ஜெபம் செய்து வந்த கொடுமை நடந்துள்ளது. ஆனால் இவ்வளவு மூட நம்பிக்கைக்கும், அறிவியல் மீதான வெறுப்புக்கும் அச்சத்துக்கும் காரணமான இவாஞ்சலிஸ்ட்டுகளைப் பற்றி பகுத்தறிவாளர்கள் மூச்சே விடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டிற்குள் நுழையும் முன் கை, கால் கழுவுவதில் தொடங்கி, சமூக இடைவெளியைப் பின்பற்றி கை கூப்பி வணக்கம் சொல்லும் வழக்கத்தை ஏற்படுத்தி இன்று உலகுக்கே முன்னுதாரணமாக இருக்கும் இந்து மதத்தை மூட நம்பிக்கை என்று இகழ்ந்து அழிக்கப் பார்க்கிறார்கள். இந்த மாதிரியான சம்பவங்களைப் பார்த்தாவது இந்துக்கள் விழித்துக் கொள்வார்களா?

Similar News