ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பல விஷயங்கள் உலகம் முழுவதும் உள்ளன. கொய்யா சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி எல்லா மக்களும் அறிந்து கொள்வார்கள். ஆனால் கொய்யா இலைகளின் நன்மைகள் பற்றி, உங்களுக்குத் தெரியுமா? இந்த நன்மைகளைப் பற்றி நீங்கள் அறிந்தால் நிச்சயமாக நம்பவே மாட்டீர்கள். ஏனென்றால் அந்த அளவிற்கு ஆரோக்கியத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. இறைவன் படைப்பில் தோன்றியுள்ள ஒவ்வொன்றும் ஒவ்வொரு விஷயத்தை சிறப்பு தன்மை வாய்ந்ததாக தான் இருக்கின்றது. அத்தகைய விஷயங்களில் கொய்யா இலையும் ஒன்றுதான்.
இன்றைய பல பேர்கள் சர்க்கரை நோயினால் அவதிப்படுகிறார்கள். அதுவும் இளம் வயதில் சர்க்கரை நோய் என்றால், இதை விட மிகவும் கடினமானது அத்தகையவர்களுக்காக இது மிகவும் உதவியானது. கொய்யா இலை நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு மருந்தாக செயல்படுகிறது. எனவே அவர்கள் வாரத்திற்கு இருமுறை இதை தேநீராக எடுத்துக் கொள்வதன் மூலம் பல நன்மைகளைப் பெற முடிகிறது. கொய்யா இலையில் தேநீர் தயாரிப்பதன் மூலம், ஆல்பா குளுக்கோசிடேஸ் நொதி குறைந்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
கொய்யா இலைகளால் தயாரிக்கப்பட்ட தேநீர் உட்கொள்வது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தி மனதை அமைதியாக வைத்திருக்கும். கொய்யா இலைகளை எடுத்து, ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை மெல்லுவதன் மூலம் வாய் கொப்புளங்கள் குணமாகும். கொய்யா இலைகளை உட்கொள்வது எடையைக் குறைக்கிறது, கொய்யா இலைகள் மாவுச்சத்தை சர்க்கரையாக மாற்றாது, கார்போஹைட்ரேட்டுகளின் செயல்பாட்டையும் குறைக்கிறது என்று கூறப்படுகிறது.