'இயேசு வருகிறார்' என ஸ்பீக்கரில் சத்தமாக வழிபாடு - குடவாசலில் திருச்சபைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

Update: 2021-07-27 02:15 GMT

குடவாசல் பகுதியில் மக்களுக்கு இடையூறாக ஸ்பீக்கர் செட் மூலம் ஜெபக்கூட்டம் நடத்திய கிருஸ்தவ திருச்சபை சீல் வைக்கப்பட்டது.

தற்பொழுதெல்லாம் வீதிக்கு வீதி, கிராமங்கள் தோறும் திடீர் ஜெபக்கூட்டங்கள் முளைக்க துவங்கியுள்ளன. ஆங்காங்கே பாதிரியார்கள் ஜெபம் என்ற பெயரில் கூட்டத்தை கூட்டி ஸ்பாக்கர் செட் வைத்து அப்பகுதி மக்களின் நிம்மதியை கெடுத்து வருகின்றனர். குறிப்பாக இந்து சமய ஆலயங்கள் உள்ள பகுதியில் இது அதிகளவில் நடைபெறுகின்றன.

இந்நிலையில் குடவாசல் அருகே உள்ள சிமினி ஊராட்சியை சேர்ந்த தலையாலங்காடு கிராமத்தில் நர்த்தனபுரீஸ்வரர் கோவில் மக்களால் வழிபடப்பட்டு வந்தது. இங்கு கடந்த மாதம் ஸ்பீக்கர் செட் மூலம் நாள் முழுக்க ஜெபம் நடைபெற்றதாகவும் இது மக்களுக்கு மிகவும் இடையூறாக இருந்ததாகவும் கூறி அப்பகுதி மக்கள் தாசில்தாருக்கு மனு அளித்தனர். இந்நிலையில் இந்த திருச்சபைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Similar News