தி.மு.க'காரன்ட்ட குடுத்த பணத்தையா கேட்குற? என பெண் நிர்வாகியை மிரட்டிய தி.மு.க உடன்பிறப்பு !

பெண் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடும் திமுக நிர்வாகி

Update: 2021-10-03 11:11 GMT

திமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக நிர்வாகிகளின் அட்டுழீயங்கள் ஆரம்பித்துள்ள நிலையில், திமுகவின் மகளிர் அணி துணை அமைப்பாளரிடமே பண மோசடியில் ஈடுப்பட்டுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தின் திமுக மகளிர் அணி துணை அமைப்பாளராக இருப்பவர் சாந்தி. இவரிடம் திமுக தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.ஸ்ரீதர் என்பவர் பார் வைப்பதற்காக 3 லட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளார்.

பணம் வாங்கி பல மாதங்கள் ஆனதால் சாந்தி திரும்ப கேட்டுள்ளார், ஆனால், ஸ்ரீதர் "பணத்தை தர முடியாது" என ஆபாசமாக பேசியுள்ளார். மேலும், "பணத்தை திரும்ப கேட்டால் கொலை செய்து விடுவேன்" எனவும் கூறியுள்ளார்.

இதனை சாந்தி கட்சியின்  மாவட்ட செயலாளரிடம் கூறியுள்ளார் கட்சி நிர்வாகிகள் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால், சாந்தி மயிலாடுதுறை எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் :  திமுக தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.ஸ்ரீதர் பார் ஏலம் எடுப்பதற்காக 3 லட்சம் ரூபாய் பணம் வாங்கி சென்றார் அதனை திரும்ப கேட்டால் கொலைமிரட்டல் விடுக்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்குகாக பலர் போராடி வரும் நிலையில் ஆளும் கட்சி நிர்வாகி பார் வைப்பதற்காக திமுக பெண்ணிடமே பண மோசடி செய்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.திமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக நிர்வாகிகளின் அட்டுழீயங்கள் ஆரம்பித்துள்ள நிலையில் திமுகவின் மகளிர் அணி துணை அமைப்பாளரிடமே பண மோசடியில் ஈடுப்பட்டுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

Similar News