பாகிஸ்தான் தற்கொலைப்படை தீவிரவாதிகளின் திட்டம் முறியடிப்பு
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற தற்கொலைப்படை தீவிரவாதிகளின் திட்டம் முறியடிப்பு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற தற்கொலைப்படை தீவிரவாதிகளை ராணுவத்தினர் கடும் துப்பாக்கி சண்டை நடத்தி விரட்டியடித்தனர்.
இரவில் ஊடுருவ முயன்ற தற்கொலைப்படை தீவிரவாதிகள் சிலருடன் ஜம்மு காஷ்மீரின் நவுஷாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் கடும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர்.
இதில் காயமடைந்த தபாரக் உசைன் என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்ட பலத்த பாதுகாப்புடன் சிகிச்சைக்காக ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளான்.
10 நாட்களுக்குள் இரண்டாவது முறையாக தற்கொலைப் படை தாக்குதல் நடத்த முயன்ற தீவிரவாதிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.