ரேணி​குண்​டா​வில் உரு​வாகும் ஆன்​மிக நகரம்: இந்​துக்​களின் பெருமை!!

By :  G Pradeep
Update: 2025-12-22 15:56 GMT

ஆந்​தி​ரா​வில் 5,000 ஆண்டு இந்து மதக் கலாச்​சா​ரத்தை பிர​திபலிக்​கும் வகை​யில், ரேணி​குண்​டா​வில் ஆன்​மிக நகரம் அமை​கிறது.

இந்து மதக் கலாச்​சா​ரத்தை அடுத்த கட்​டத்​துக்கு கொண்டு செல்​வதே இதன் நோக்​கம். சுமார் 5,000 ஆண்​டு​கள் பழமை​யான இந்து மதக் கலாச்​சா​ரம் தொடக்​கம் முதல் வருங்​கால சந்​த​தி​யினரும் அறி​யும் வகை​யில் இந்​நகரம் அமை​கிறது.

இந்​நகரத்தில் சனாதன தர்​மம், இந்​துக்​களின் பழக்க வழக்​கங்​கள், ராமாயணம், மகா​பாரதம் உட்பட பல்​வேறு இதி​காசங்​கள், இந்து புராணங்​கள் இருக்​கும்.

300 ஏக்​கரில், ‘வாழ்வியல் கண்​காட்சி நகரம்’ உரு​வாக்​கப்பட உள்​ளது. வேதத்​துக்​கென தனி கண்​காட்சி மையம் அமைக்கப்பட உள்​ளது.

இந்த ஆன்​மிக நகரம் அமைப்​ப​தின் மூலம் சுமார் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்​கும் என ஆந்​திர அரசு தெரி​வித்​துள்​ளது.

Tags:    

Similar News