கொரோனோ ஊரடங்கு தமிழகத்தில் அதிகாரிகள் நியமனம் - தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Update: 2021-04-09 02:15 GMT

தமிழகத்தில் கொரோனோ தொற்றின் இரண்டாம் அலை வேகமெடுப்பதல் தடுப்பு நடவடிக்கைகள் புயல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தளர்வுகளுடன் கூடிய 'கொரோனோ ஊரடங்கை' நேற்று அரசு அறிவித்ததுடன் மாவட்ட வாரியாக அதிகாரிகளை கொரோனோ தடுப்பு நடவடிக்கைக்காக நியமித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 10- ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளது.

இதற்காக கொரோனா தடுப்பு பணிகளுக்காகக் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காகக் கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, அரியலூர்- தரேஸ் அகமது, செங்கல்பட்டு- சமயமூர்த்தி, கோவை- முருகானந்தம், கடலூர்- ககன்தீப் சிங், தருமபுரி- நீரஜ் மிட்டல், திண்டுக்கல்- மங்கத்ராம் சர்மா, ஈரோடு- காகர்லா உஷா, காஞ்சிபுரம்- சுப்ரமணியன், கரூர்- விஜயராஜ் குமார், கிருஷ்ணகிரி- பீலா ராஜேஷ், கன்னியாகுமரி- ஜோதி நிர்மலாசாமி, மதுரை- சந்திரமோகன், நாமக்கல்- தயானந்த் கட்டாரியா, நாகை, மயிலாடுதுறை- முனியநாதன், நீலகிரி- சுப்ரியா சாகு, பெரம்பலூர்- அனில் மேஷ்ராம், புதுக்கோட்டை- ஷம்பு கல்லோலிகர், ராமநாதபுரம்- தர்மேந்திர பிரதாப், சேலம்- நசிமுதீன், ராணிப்பேட்டை- லட்சுமி ப்ரியா, சிவகங்கை- மகேஷன் காசிராஜன், தென்காசி- அனு ஜார்ஜ், தஞ்சை- சுப்பையன், தேனி- கார்த்திக், தூத்துக்குடி- குமார் ஜெயந்த், திருச்சி பி ரீட்டா ஹரீஷ், நெல்லை- அபூர்வா, திருப்பத்தூர்- ஜவகர், திருப்பூர்- கோபால், திருவள்ளூர்- பாஸ்கரன், திருவண்ணாமலை- தீரஜ்குமார், விருதுநகர்- மதுமதி, திருவாரூர்- ஷில்பா பிரபாகர் சதீஸ், வேலூர்- ராஜேஷ் லக்கானி, விழுப்புரம்- ஹர்சாஹே மீனா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Similar News