'தமிழகம் ஆன்மீக பூமி, எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் நிலையாக இருக்கும்' - அடித்து கூறும் மதுரை ஆதீனம்

Update: 2022-05-30 08:49 GMT

'ஆன்மீகம் நிலையாக இருக்கும்' என மதுரை ஆதீனம் பேசியுள்ளார்.


ஓசூரில் நடந்த விழாவில் மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, 'தாய்மொழிப் பற்றை பின்பற்ற வேண்டும், வெள்ளைக்காரன் நாட்டை விட்டு சென்றாலும் ஆங்கிலம் செல்லவில்லை. அமிழ்தினும் இனிது தமிழ், 'தெய்வ மொழி' என்ற அடைமொழி தமிழ் தவிர வேறு எதற்கும் இல்லை தமிழுக்கு மட்டும்தான் சங்கம் அமைத்தனர். மதுரை ஆதீனத்துக்கு வள்ளலாருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு' என்றார்.

மேலும் பேசிய அவர், 'தமிழகம் ஆன்மிக பூமி எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் ஆன்மிகம் நிலையாக இருக்கும். பாரதத்தாய், பசுத்தாய், பெற்றதாய், பூமித்தாய் இவற்றைக் காப்பாற்ற தவறினால் நாடு முன்னேறாது. சாதி வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையாக வாழவேண்டும்' என அவர் பேசினார்.


Source - Dinamalar

Similar News