விளையாட்டு பட்ஜெட் 3 மடங்கு உயர்வு! கடந்த 9 ஆண்டுகளில் பிரதமரின் செயல்! அனுராக் தாகூர் பெருமிதம்!

Update: 2023-12-24 01:57 GMT

பிரதமர் நரேந்திர மோடி விளையாட்டு பட்ஜெட்டில் கடந்த 9 ஆண்டுகளில் மூன்று மடங்கை உயர்த்தியுள்ளார் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவிப்பு. 

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், விளையாட்டுத்துறையில் நல்ல வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று எங்களால் இயன்ற அளவிற்கு அனைத்து முயற்சிகளையும் செய்து கொடுத்து வருகிறோம். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி விளையாட்டிற்கென்று ஒதுக்கிய பட்ஜெட்டை கடந்த ஒன்பது ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்த்தி உள்ளார். அதற்கேற்ற வகையில் நமது விளையாட்டு வீரர்களும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 100க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். 

அவர்கள் இந்த போட்டிகளில் கலந்து கொள்வதற்கு முன்பு 100 பதக்கங்களை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கடக்க முடியுமா என்ற கேள்வியை அவர்களிடம் முன் வைத்தேன் அப்பொழுது அவர்கள் நிச்சயமாக கடக்க முடியும் என்று நம்பிக்கை அளித்தனர், அதேபோன்று ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் மிகச் சிறந்த செயலை வெளிப்படுத்தி 100க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றனர் என்று பெருமிதம் அடைந்தார். 

Source : Dinamalar

Similar News