ஓர் வரலாற்று சிறப்புமிக்க நாளாக மாறும் "ஜூன் 4" - சிலிர்ப்பில் அண்ணாமலை

Update: 2024-05-06 16:29 GMT

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முடிந்ததை அடுத்து கேரளாவில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கும் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தது. 

அதற்குப் பிறகு தெலுங்கானா மாநிலத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் இறங்கிய அண்ணாமலை பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினார். அப்பொழுது ஒரு வலுவான நிலையில் மோடியின் அலை இருக்கிறது. அதோடு இது ஒவ்வொரு நாளும் அதிகரித்தே வருகிறது! 

தேர்தல் முடிவுகள் வெளியாகின்ற ஜூன் நான்காம் தேதி ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாளாக இருக்கும், தென்னிந்திய முழுவதும் லோக்சபா தேர்தலில் மோடி அலை வீசப் போகிறது அதிக இடங்களில் இதுவரை இல்லாத அளவாக பாஜக வெற்றி பெறும் என்று கூறினார். 

Source : Dinamalar 

Similar News