அருணாசல பிரதேசத்தில் இந்தியா - சீனாவை இணைக்கும் ரூ.625.61 கோடியில் புதிய நெடுஞ்சாலை - நிதின் கட்கரி அறிவிப்பு!
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய அரசு ஒரு சிறந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கி உள்ளதை குறித்து கூறியுள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தில், தேசியத்தின் டாட்டோ முதல் மோனிகாங் வரையிலான 53.04 கிலோமீட்டர் தூரத்துக்கு இடைநிலைச் சாலை அமைக்க ரூ.625.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த நெடுஞ்சாலை 913, எல்லைப்புற நெடுஞ்சாலை என்றும் அழைக்கப்படுகிறது என கூறினார்.
அதோடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மூலோபாயவில் அமைக்கப்பட்டுள்ள சாலையானது அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லை பகுதியில் சமூக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும், இந்தியா - சீனா எல்லைக்கு அனைத்து வானிலை இணைப்பையும் உறுதி செய்யும் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் இதனை தெரிவித்ததை அடுத்து நம் மாநில முதல்வர் மெபா காண்டு நரேந்திர மோடியின் கீழ் அருணாச்சலப் பிரதேச மாநிலம் உள்கட்டமைப்பு மாற்றத்தில் முன்னணியில் இருப்பது பெரும் பாக்கியம் என்றும் தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.
Source : India defence news