நாள்தோறும் ஆயிரமாயிரம் ஏழைகளின் பசியாற்றும் பா.ஜ.க பிரச்சார பிரிவு செயலாளர் மகேஷ் - நெகிழ்ச்சியில் சேலம்!
நாள்தோறும் ஆயிரமாயிரம் ஏழைகளின் பசியாற்றும் பா.ஜ.க பிரச்சார பிரிவு செயலாளர் மகேஷ் - நெகிழ்ச்சியில் சேலம்!
கொரோனா நோய் தொற்று அச்சத்தினால் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு 24 நாட்களை கடந்து சென்றுக் கொண்டு இருக்கிறது. இக்காலங்களில் பலர் சமூக சேவைகளை செய்து வருகின்றனர். பலர் மளிகை பொருட்களை வழங்குகின்றனர், உணவுகளை வழங்குகின்றனர். இன்னபிற உதவிகளையும் செய்து வருகின்றனர். அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், தனி மனிதர்கள் என அனைவரும் தங்களால் இயன்ற சேவையை மக்களுக்கு செய்து வருகின்றனர்.
அரசாங்கம் தனி இயந்திரமாக இம்மாதிரி நேரங்களில் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைவது சற்றே கடினம் தான். இருப்பினும், சிலர் தங்கள் சேவைகளை தொடர்ந்து பல தடங்கல்களையும், சிரமங்களையும் மீறி செய்து வருகின்றனர். அதில் ஒருவர் தான் சேலத்தை சேர்ந்த மகேஷ். தமிழக பா.ஜ.க-வின் பிரச்சாரப்பிரிவின் மாநில செயலாளராக தற்போது பதவி வகித்து வருகிறார். ஊரடங்கு உத்தரவிற்கு முன் கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் இவர் தன் குழுவினருடன் சேலம் நகரின் பட்டி, தொட்டியெல்லாம் தன்னுடைய ஜீப்பில் சென்று ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கான பிரச்சாரத்தை மேற்கொண்டது மட்டுமின்றி லட்சக்கணக்கான ஏழை எளியவர்களுக்கு அந்த படிவங்களையும் பதிவிரக்கம் செய்து கொடுத்து வந்தார்.
இக்கொரோனா கட்டுப்பாடு நேரத்தில் பலர் உணவின்றி தவிப்பர் என அறிந்த இவரின் குழு, முதன்முதலாக கடந்த மார்ச் 26-ஆம் தேதி இரண்டாயிரம் பேருக்கு இவர் குழுவினர் மதிய உணவு தயாரித்து வழங்கினர். Ready for distribution pic.twitter.com/hOO6QFbmCf
— Mahesh 🇮🇳 (@Mahesh10816) March 26, 2020
முதல் நாளே பல போலீஸார், சேலம் பொது மருத்துவமனை வளாகம் என பசியால் துடித்த அனைவருக்கும் இவரது குழுவால் சாம்பார் சாதம் வழங்கப்பட்டது.Just came back home after serving prasadam ( food) to nearly 2000 people
— Mahesh 🇮🇳 (@Mahesh10816) March 26, 2020
In Salem GH thousands of poor people were hungry, no canteen no hotel. Patients, attendents , nursing staff, Aayas, Ambulance drivers , police men all were served piping hot Sambar rice. All loved it pic.twitter.com/oI9zg1Nnsg
இரண்டாம் நாள் மார்ச் 27-ஆம் தேதி இதே போல் அனைவருக்கும் தயிர் சாதம் வழங்கப்பட்டது.Today distributing Curd rice pic.twitter.com/UC4NZXEeba