கொரோனா - காவல்துறையுடன் தன்னார்வலராக இணைந்த பிரபல நடிகர்!
கொரோனா - காவல்துறையுடன் தன்னார்வலராக இணைந்த பிரபல நடிகர்!
கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் திரைத்துறை பிரபலங்கள் பலரும் சமூக இடைவெளி, ஊரடங்கு போன்றவற்றை வலியுறுத்தி காணொளிகள், அறிக்கைகள் வெளியிட்டும் வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று மதுரை காவல்துறையினருடன் தன்னை தன்னார்வலராக இணைத்துக் கொண்ட இயக்குநர் நடிகர் சசிகுமார், ஊரடங்கைக் கடைப்பிடிக்காமல் சாலைகளில் சுற்றித் திரிபவர்களிடம் ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் காவல்துறையினர் சந்திக்கும் சவால்களை மக்களுக்குக் காணொளி மூலம் எடுத்துரைத்துள்ளார்.