இந்து மரபும் அறிவியல் அறிவும் - மரபுகளின் பின்னிருக்கும் அறிவியல் மாயங்கள்!
இந்து மரபும் அறிவியல் அறிவும் - மரபுகளின் பின்னிருக்கும் அறிவியல் மாயங்கள்!
பிரபஞ்சத்திற்கு என ஒரு மொழியுண்டு. அது ஒரு குறிப்பிட்ட அறிவியல் விதியின் படி இயங்க கூடியது. நாம் அதை பின்பற்ற விரும்பாவிட்டாலோ அல்லது பின்பற்றாமல் போனாலோ நமக்கு முழுமையான மகிழ்ச்சி என்பது சாத்தியமற்று போகலாம். நமக்கு நேரம் துன்பம் அல்லது இடர்கள் என்பது இயற்கையின் விதியை பின்பற்றும் வல்லமை நமக்கு இல்லாது போவதாலேயே நமக்கு நிகழ்கிறது.
உலகில் இந்து மதம் ஒன்றே இயற்கையின் விதிகளை அடிப்படையாக கொண்டுள்ளது. அதனாலேயே மேலை நாடுகளில் மற்ற மதங்களுக்குள் எழுவது போல அறிவியலுக்கும் இந்து மதத்திற்கும் இடையே எந்த வித சர்ச்சைகளும் எழுவதில்லை.
ஆனால் துருதிர்ஷ்டவசமாக இந்து மதம் என்பது அறிவியல் சார்பற்றது என்றும் அது மிக அதிகமான மூட நம்பிக்கைகளை கொண்டுள்ளது என்றும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
இதை கட்டுடைக்கும் வகையில் நம் இந்து மரபினில் நாம் கடைப்பிடிக்கும் அடிப்படை அம்சங்களின் அறிவியல் சாரத்தை இந்த பகுதியில் தினமொரு தலைப்பில் காணயிருக்கிறோம்.
இருகைக்கூப்பி நமஸ்கரிப்பது ஏன்?
வணக்கம். இது இந்து மரபில் மிகச்சாதரணமாக பின்பற்றப்படும் ஒரு வணங்கும் முறை. இரு கைகளைக்கூப்பி வணக்கம் அல்லது நமஸ்காரம் என்பது ஒரு மரியாதைக்குரிய உடல்மொழியாக கருதப்படுகிறது. ஒரு கோவிலுனுள் நுழைகிற போதோ அல்லது கடவுள்களை உணர்கிற போதோ வயதில் மூத்தோரை காண்கிற போதோ இவ்வாறு நாம் செய்வது வழக்கம். இருக்கைகளை கூப்பி நமஸ்கரித்தல் என்பது யோக மரபில் ஒரு வகையான முத்திரை. ஆனாலும் நாம் பெரும்பாலான நேரங்களில் நம் மரியாதையை, நன்றியுணர்வை, மேலும் பல நல்லதிர்வுகளை நாம் உணர்கிற போது நமஸ்கரித்து வெளிப்பத்துகிறோம்.
இந்த கைகூப்பி வணக்கம் செலுத்தும் முறைக்கு பின் சொல்லபடும் தாத்பரியம் என்பது நாம் வணங்குவது யாராக அல்லது எதுவாக இருந்தாலும் சரி, அது உருவில் பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ இருந்தாலும் சரி, அதன் சக்தி எந்த அளவில் தீவிரமானதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி நாம் வணங்கும் ஒரு உயிர் அல்லது ஒரு உயிரற்ற எதுவாக இருந்தாலும் அது இந்த உலகில் இருப்பதற்கு பின் ஒரு தெய்வீக ஆற்றல் இருக்கிறது. அந்த தெய்வீக ஆற்றலை அந்த தெய்வீக தன்மையை நாம் வணங்குகிறோம் என்பதே நாம் கைக்கூப்பி ஒன்றை வணங்க்குவதின் தார்பரியம் என பெரியவர்கள் சொல்ல அறிந்து உள்ளோம்.