புதுச்சேரி : இதுவரை இல்லாத புதிய உச்சமாக 166 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று.!

புதுச்சேரி : இதுவரை இல்லாத புதிய உச்சமாக 166 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று.!

Update: 2020-07-29 12:54 GMT

புதுச்சேரில் 837 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது புதுச்சேரியில் 154 பேர், காரைக்காலில் 12 பேர் என மொத்தம் 166 (19.8 சதவீதம்) பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் 106 பேர் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரியிலும், 45 பேர் ஜிப்மரிலும், 3 பேர் கோவிட் கேர் சென்டரிலும், 12 பேர் காரைக்காலிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 3,171 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது 1112 நபர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 1869 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை கொரனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 47 ஆக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 147நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று அதிகபட்சமாக 166 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News