தவறுகளைத் திருத்திக் கொள்ள தயங்க மாட்டோம் - நியூஸ்18 தமிழ் செய்தித் தொலைக்காட்சி அறிக்கை!
தவறுகளைத் திருத்திக் கொள்ள தயங்க மாட்டோம் - நியூஸ்18 தமிழ் செய்தித் தொலைக்காட்சி அறிக்கை!
பல விதங்களிலும் ஒரு சாராருக்கு ஆதரவாகவும் மற்றொரு சாராரை காரணமின்றி வில்லனாக சித்தரிக்கும் செய்திகள், நிகழ்ச்சிகளை வெளியிடுவதை தமிழக செய்தி ஊடகங்கள் வழக்கமாகக் கொண்டுள்ளன. இதில் பெரும்பாலான ஊடகங்களும் அவற்றில் பணிபுரியும் செய்தியாளர்களும் தி.மு.க சார்பு மற்றும் இந்து எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுப்பதைப் பற்றி சமூக ஊடகங்களில் தற்போது அதிக அளவு பேசப்படுகிறது.
அந்த விதத்தில் சமூக செயற்பாட்டாளர் மாரிதாஸ் தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஹசீப் முகமது மற்றும் தலைமை பொறுப்பாசிரியர் குணசேகரன் ஆகியோர் எவ்வாறு தி.மு.கவுக்கு ஆதரவாகவும் மாநில மற்றும் மத்திய ஆளும் அரசுகளுக்கு எதிராகவும் நடந்து கொள்வதோடு இந்து எதிர்ப்பு கருத்துக்களை ஊக்குவிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதைப் பற்றி ஆதாரங்களுடன் விளக்கி இருந்தார்.
இதையடுத்து இவர்கள் இருவர் மீதும் நியூஸ்18 நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் நடவடிக்கை எடுத்ததாக பரபரப்பான தகவல்கள் வெளியாகின. ஹசீப் முகமது அவர் வகித்து வந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் ஆசிரியர் குணசேகரனின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனை எதிர்த்து தி.மு.க தலைவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் தொல்.திருமாவளவன் போன்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆகியோர் சமூக ஊடகங்களில் எதிர்ப்பை வெளியிட்டனர்.
இந்நிலையில் நியூஸ்18 தமிழ்நாடு செய்தி சேனலின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, "சமீப நாட்களாக தமிழகத்தில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகள் மூலம் ஒரு தரப்பினர் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி மீது ஒரு மோசமான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர், அவர்கள் ஆதாயம் பெறும் வகையில் தங்களுக்கு ஆதரவாக தொலைக்காட்சி இயங்குகிறது என்பது போன்ற பிம்பத்தை கட்டமைக்கின்றனர்.