கதறக்கதற பதிலடி! ஜம்மு காஷ்மீரில் மசூதிக்குள் பதுங்கிய 2 பயங்கரவாதிகள் உட்பட 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

கதறக்கதற பதிலடி! ஜம்மு காஷ்மீரில் மசூதிக்குள் பதுங்கிய 2 பயங்கரவாதிகள் உட்பட 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

Update: 2020-06-19 11:45 GMT

கடந்த 24 மணி நேரத்தில் ஜம்மு-காஷ்மீரில் ஷோபியன் மற்றும் பாம்பூரில் நடந்த இரண்டு மோதல்களில் எட்டு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில், பாம்பூர் பகுதியில் நடந்த மோதலில் மசூதிக்குள் இருந்த இரு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் வெளியேற்றினர். இந்த நடவடிக்கையில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளை பயன்படுத்தாமல் வெறும் கண்ணீர் புகை குண்டுகளை மட்டுமே பயன்படுத்தியதாக ஜம்மு-காஷ்மீர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மசூதியில் அடைக்கலம் புகுந்த இரண்டு பயங்கரவாதிகளை அங்கிருந்து வெளியேற்ற பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை மட்டுமே பயன்படுத்தினர் என காஷ்மீர் காவல் ஆய்வாளர் விஜய் குமார் தெரிவித்தார்.

"பொறுமையாகவும், மதத்தின் புனிதத்தன்மையை சீர்குலைக்காமலும், துப்பாக்கி மற்றும் வெடி குண்டுகளை பயன்படுத்தாமல் வெறும் கண்ணீர் புகை குண்டுகளை மட்டுமே பயன்படுத்தினோம். பின்னர் அந்த இரு பயங்கரவாதிகள் வெளியேற்றப்பட்டனர்." என ஐ.ஜி.பி கூறினார்.


Similar News