பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி தலைக்கு 2 கோடி பரிசு - பா.ஜ.க நிர்வாகி அதிரடி!

மோடி குறித்து சர்ச்சை பேச்சை வெளியிட்டதால் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி தலையை கொண்டு வந்தால் இரண்டு கோடி பரிசு என்று உத்தர பிரதேச பா.ஜ.க நிர்வாகி அதிரடி அறிவிப்பு விடுத்துள்ளார்.

Update: 2022-12-19 10:30 GMT

பாகிஸ்தான் வெபிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோவுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிலாவல் பூட்டோவுக்கு எதிராக நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் பாக்பாத் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க சார்பில் இன்று போராட்டம் நடந்தது.


அப்போது அங்கு பேசிய பா.ஜ.க உள்ளூர் நிர்வாகியும் மாவட்ட கவுன்சில் உறுப்பினருமான மனுபால் பன்சால் , 'பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி 'பிலாவல் பூட்டோவின் தலையை துண்டித்து கொண்டு வருபவர்களுக்கு நான் 2 கோடி பரிசு கொடுப்பேன்' என்று அதிரடியாக அறிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவ அவர் தான் நன்கு அறிந்து தான் அவ்வாறு பேசியதாகவும் தனது கருத்தில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.





 



 


Similar News