2008-ல் சீன கம்யூனிஸ்ட் கட்சி - காங்கிரஸ் கட்சி ஒப்பந்தம்: NIA விசாரணை கோரும் வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி!

2008-ல் சீன கம்யூனிஸ்ட் கட்சி - காங்கிரஸ் கட்சி ஒப்பந்தம்: NIA விசாரணை கோரும் வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி!

Update: 2020-06-22 02:15 GMT

2008-ஆம் ஆண்டு, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாகியது, மூத்த வழக்கறிஞரும் பா.ஜ.க தலைவருமான மகேஷ் ஜெத்மலானி இந்த ஒப்பந்தம் குறித்து தேசிய புலனாய்வு விசாரணை(NIA) கோரியுள்ளார்.

தனது ட்விட்டர் கணக்கிலிருந்து அந்தப் புகைப்படத்தை வெளியிட்ட ஜெத்மலானி, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் NIA விசாரணையைத் தொடங்க வேண்டும் என்றும், சீனாவில் ஆளும் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தி கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை NIA கைப்பற்ற வேண்டும் என்றும் கூறினார்.

அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி மற்றும் தற்போதைய சீனப் பிரதமர் ஜி ஜின்பிங் முன்னிலையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் நாட்டின் பாதுகாப்பிற்கு மோசமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும், கடுமையான UAPA சட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் குறித்து NIA விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினார்.

சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கையெழுத்திட்ட ஒப்பந்தம், லடாக்கில் LAC-யில் கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் சமீபத்தில் நடந்த மோதலுக்குப் பின்னர் முக்கியத்துவம் பெற்றது. 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி பெய்ஜிங்கில் இரு தரப்பினருக்கும் இடையே உயர் மட்டத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் அவர்களுக்கிடையில் ஒத்துழைப்பதற்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இரு கட்சிகளுக்கும் "முக்கியமான இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்து ஒருவருக்கொருவர் ஆலோசிக்க வாய்ப்பு" வழங்கியது.

அந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சி இந்தியாவில் UPA அரசாங்கத்தை வழிநடத்தியது, மன்மோகன் சிங் தலைமையிலான அரசு மீது சூப்பர் அமைச்சரவையாக செயல்பட்ட தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவராக சோனியா காந்தி இருந்தார். இந்த ஒப்பந்தத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் CPC-யின் சர்வதேச துறை அமைச்சர் வாங் ஜியா ரூய் ஆகியோர் சோனியா காந்தி மற்றும் அப்போதைய சீன துணை அதிபர் ஜி ஜின்பிங் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்னர், அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோர் ஜி மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுடன் பரஸ்பர நலன்களைப் பற்றி விவாதிக்க நீண்ட சந்திப்பை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News