மக்களை மோசடி செய்த 2500 கடன் செயலிகள் கூகுள் நிறுவனத்தால் நீக்கம் - நிர்மலா சீதாராமன் தகவல்!

2500க்கும் மேற்பட்ட மோசடி கடன் செயலிகளை கூகுள் நிறுவனம் நீக்கி இருப்பதாக மக்களவைகள் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Update: 2023-12-19 03:45 GMT

நாடாளுமன்ற மக்களவை  கேள்வி நேரத்தின் போது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஒரு கேள்விக்கு எழுத்து மூலம் பதில் அளித்து இருந்தார். அவர் கூறியிருப்பதாவது :-


செயலி மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள் மக்களை மோசடி செய்து வருவதாக புகார்கள் வருகின்றன. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அமைப்புகளுடன் மத்திய அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது மோசடி கடன் செயலிகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சட்டப்பூர்வமாக கடன் செயலிகள் பட்டியலை மத்திய அரசிடம் ரிசர்வ் வங்கி அளித்தது அதை கூகுள் நிறுவனத்துடன் மத்திய அரசு பகிர்ந்து கொண்டது .


கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் சட்டபூர்வ செயலிகளை மட்டுமே இடம்பெறச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தது. கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை 3500 கடன் செயலிகள் முதல் 4000 கடன் செயலிகள் வரை கூகுள் ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில் 2500க்கும் மேற்பட்ட மோசடி கடன் செயலிகளை தனது ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியும் முடக்கியும் நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு ரிசர்வ் வங்கி ஆகியவை நடவடிக்கை எடுத்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார் .


மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் முத்ரா திட்டத்தின் கீழ் ரூபாய் 26 லட்சத்து 12 ஆயிரம் கோடி மதிப்புள்ள 44 கோடி கடன்கள் வழங்கப்பட்டிருப்பதாக கூறினார். மக்களவை கேள்வி நேரத்தில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி கூறியதாவது:-  2019 - 2020 நிதி ஆண்டு முதல் 2022 -2023 நிதியாண்டு வரையிலான நான்கு ஆண்டுகளில் 2980 குடும்பங்களில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. அதில் மொத்தம் ரூபாய் 5 ஆயிரத்து 95 கோடியே 45 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன . இவ்வாறு அவர் கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Similar News