3 ஆதரவற்ற குழந்தைகளின் பொறுப்பை ஏற்ற சோனு சூட் - குவியும் வாழ்த்துக்கள்.!

3 ஆதரவற்ற குழந்தைகளின் பொறுப்பை ஏற்ற சோனு சூட் - குவியும் வாழ்த்துக்கள்.!

Update: 2020-08-02 11:21 GMT

சோனு சூட் தற்போது செய்து வரும் உதவிகள் மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்து வருகிறது.இவர் செய்யும் உதவிகள் அடுத்தடுத்து கூட வந்து கொண்டேதான் இருக்கின்றன. தற்போது கூட இவர் பிறந்த நாளில் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாங்கித் தருவதாகவும் சோனு சூட் தெரிவித்திருந்தார்.

சினிமாவில் வில்லனாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் மிக நல்ல உள்ளம் கொண்டவராக இருக்கிறார். இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் இவர் செய்யும் உதவிகளுக்கு அளவே இருக்காது.இவரது உதவிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமே உள்ளன. கொரோனா ஊரடங்கு காலத்தில் தினசரி உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கியதோடு ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் வீடு திரும்புவதற்கு போக்குவரத்து வசதிகள் முதலியவை ஏற்பாடு செய்து கொடுத்தார். சமீபத்தில்கூட விவசாயி ஒருவருக்கு மாடு வாங்க பணம் இல்லாததால் டிராக்டர் வாங்கிக்கொடுத்தார்.

வெளிநாட்டில் படிக்கச் சென்றிருக்கும் மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் இந்தியா வர தனி விமானம் அமைத்துக் கொடுத்தார். இந்நிலையில் 3 ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து இருக்கிறார். அதை பத்திரிகையாளர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் மூன்று குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டு உதவுமாறு தெரிவித்திருந்தார். அதை பார்த்து சோனு சூட் இனி அவர்கள் ஆதரவற்றவர்கள் இல்லை எனவும் என் பொறுப்பில் இருப்பார்கள் எனவும் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களிலும், ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News