400 ஆதிவாசி குடும்பங்களுக்கு உதவிய நடிகர் ராணா டகுபாட்டி - குவியும் பாராட்டு!
நடிகர் ராணா டகுபாட்டி 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு தேவையான நிவாரண பொருள்களை வழங்கியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ராணா டகுபாட்டி இவர் நடிப்பில் தற்போது 'விராட பருவம்' திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் நடிகர் ராணா வனத்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
விராட பருவம் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிர்மல் எனும் மாவட்டத்தில் நடத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பின்போது, அந்த பகுதியில் உள்ள ஆதிவாசி மக்களுடன் நெருங்கி பழகியவர் நடிகர் ராணா அதன் காரணமாக தற்போது கொரோனா ஊரடங்கு சமயத்தில் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளார்.
அங்கு வசிக்கும் 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு தேவையான மளிகை, உணவுப் பொருள், மருத்துவ பொருட்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளார். நடிகர் ராணாவின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.