மருத்துவ படிப்பில் ஒபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரிய மனுவை ஏற்க மறுப்பு - இடஒதுக்கீடு 'அடிப்படை உரிமை அல்ல' எனக்கூறி உச்ச நீதிமன்றம் அதிரடி.!

மருத்துவ படிப்பில் ஒபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரிய மனுவை ஏற்க மறுப்பு - இடஒதுக்கீடு 'அடிப்படை உரிமை அல்ல' எனக்கூறி உச்ச நீதிமன்றம் அதிரடி.!

Update: 2020-06-11 07:54 GMT

மருத்துவ கல்விக்கான அகில இந்திய இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஒபிசி) பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க கோரி அதிமுக, திமுக, பாமக ஆகிய கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தன. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதில் இட ஒதுக்கீட்டை மறுப்பது அடிப்படை உரிமைகளை மறுப்பதாகும் என வாதிடப்பட்டது. அதற்கு பதிலளித்த நீதிபதிகள் இடஒதுக்கீடு அடிப்படை உரிமைகளின் கீழ் வராது என்று விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த முடியாது என கூறியுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்க சொல்லி உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகத்திலேயே தமிழக அரசுடன் இணைந்து திமுக, பாமக ,திக ஆகிய கட்சிகள் இணைந்து இந்த ஒரே விஷயத்தில் டெல்லிவரை சென்று கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.   

Similar News