தமிழ்நாட்டில் ரூ. 7,515 கோடி அளவில் முதலீடு செய்வதற்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டம் - இத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளதா.?

தமிழ்நாட்டில் ரூ. 7,515 கோடி அளவில் முதலீடு செய்வதற்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டம் - இத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளதா.?

Update: 2020-07-11 07:26 GMT

ஆப்பிள் நிறுவனத்துக்கு உதிரிபாகங்களை தயாரித்து கொடுக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம், தற்போது சென்னையை அடுத்து இருக்கும் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் ரூபாய். 7,515 கோடி அளவில் முதலீடு செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ஆலையில் தான் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் XR மாடல் தயாரிக்கப்படுகிறது. தற்போது இந்த ஆலையில் ரூபாய். 7,515 கோடி அளவில் முதலீடு செய்வதற்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் முயற்சி செய்துள்ளது. இதனால் அங்கு 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.


அமெரிக்கா-சீனா இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையால் ஆப்பிள் நிறுவனம் செல்போன் தயாரிப்பதை குறைத்து சீனாவில் இருந்து வெளியேற நடவடிக்கை எடுத்து வருகிறது. சீனாவில் இருக்கும் ஃபாக்ஸ்கான் ஆலையில் தயாரிக்கப்படும் செல்போன் உதிரிபாகங்களை ஸ்ரீபெரும்புதூரில் தயாரிக்கப்படும் என கூறப்படுகிறது. 

Similar News