80 கோடி மக்கள் பயன்பெறும், நவம்பர்2020 வரை இலவச ரேஷன் விரிவாக்கம் பிரதமரின் அறிவிப்புக்கு சாமானியனின் மகிழ்ச்சி.!
80 கோடி மக்கள் பயன்பெறும், நவம்பர்2020 வரை இலவச ரேஷன் விரிவாக்கம் பிரதமரின் அறிவிப்புக்கு சாமானியனின் மகிழ்ச்சி.!
ஊரடங்கு காலத்தில் எந்த வித வருமானமும் இல்லாத நிலையில் கொரோனா பெருந்தொற்று ஏழைகளையும் மிகவும் மோசமாகப் பாதித்துள்ளது. வளர்ச்சியின் வேகத்தை மீட்டெடுப்பதை நோக்கி நாடு திட்டமிட்ட வகையில் முன்னேறி வரும் நிலையில் இந்த ஊரடங்கு விலக்கல் காலம் மிகவும் முக்கியமானதாகும்.
ஏழைகள், பின்தங்கிய மக்களைப் பொறுத்தவரையில் உணவு என்பது மிகவும் அத்தியாவசியமான ஒரு தேவையாகும். ஊரடங்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு ஒவ்வொரு துறையும் மெதுவாக செயல்பாட்டுக்கு வந்து கொண்டிருந்த போதிலும் ஏதாவது ஒரு வேலைவாய்ப்பு கிடைக்கும் வரையில் ஏழைகள் மக்களுக்கு உணவு தேவைப்படுகிறது.
எனவே நவம்பர் மாதம் வரையில் இலவச குடிமைப் பொருள்கள் வழங்குவது நீடிக்கப்படுகிறது என்ற பிரதமரின் சமீபத்திய அறிவிப்பு அவர்களுக்கு மிகப்பெரும் உதவியாக வந்து சேர்ந்தது.
பிரதமர் ஏழைகள் மேம்பாட்டு உணவுத் திட்டத்தின் கீழ் 80 கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள். மாதந்தோறும் கூடுதலாக அவர்களுக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக. வழங்கப்படும். மேலும் கூடுதலாக அவர்களுக்கு மாதந்தோறும் ஒரு கிலோ பருப்பு வகைகளும் இலவசமாக வழங்கப்படும்.
தனது உரையில் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என்ற கருத்தாக்கத்தின் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தியிருந்தார். பணி மாறுதலின் விளைவாக சொந்த ஊரிலிருந்து வெளியே செல்லும் அரசு ஊழியர்களுக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் இது பெருமளவிற்குப் பயனளிக்கும்.
ஒரு நகருக்குள்ளேயே ஒரு வார்டில் இருந்து வேறொரு வார்டுக்கு குடிபெயர்ந்து செல்லுவோருக்கும் பெயர்வுத் திறன் கொண்ட இந்த ரேஷன் அட்டை பயனுள்ளதாக இருக்கும்.