ஆட்டத்தை தொடங்கினார் அமித் ஷா - அதிரடியாக தயாராகும் 'மிஷன் காஷ்மீர்' திட்டம் : இந்தியாவில் அடியோடு கருவறுக்கப்படும் தீவிரவாதம்.!
ஆட்டத்தை தொடங்கினார் அமித் ஷா - அதிரடியாக தயாராகும் 'மிஷன் காஷ்மீர்' திட்டம் : இந்தியாவில் அடியோடு கருவறுக்கப்படும் தீவிரவாதம்.!
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தொகுதிகளை மறுவரையறை செய்ய மத்திய அரசு
முடிவு செய்துள்ளது. இதன்மூலம் அங்கு நிலவும் தீவிரவாத நட வடிக்கைகளுக்கு
முடிவு ஏற்படும் என பாஜக எதிர்பார்க்கிறது.
ஜம்மு-காஷ்மீருக்கு உள்ள
சிறப்பு அதிகாரம் காரணமாக மத்திய அரசால் மற்ற மாநிலங் களைப் போல் அங்கு
தலையிட முடியவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அதில்
முக்கியமாக, ஜம்மு-காஷ்மீரின் சட்டப்பேரவை தொகுதிகள் உரு வான வரலாற்றில் பல
தவறுகள் நிகழ்ந்திருப்பதாகக் கருதப்படு கிறது. குறிப்பாக ஜம்முவின் டோக்ரா
சமூகத்தினர் அதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்முவை
தலைநகராகக் கொண்டு சுமார் 100 வருடங்கள் ஆண்ட இச்சமூகத்தினர் அம்மாநில அரசு
அலுவலகங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர். ஆனால்,
அவர்களால் அம்மாநில எம்எல்ஏக்க ளாக வர முடிவதில்லை. இதற்கு அவர்கள் வாழும்
தொகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்கள் வெற்றி, தோல்வியை முடிவு செய்யும் நிலை
யில் இருப்பது காரணம். இத்தனைக் கும் டோக்ரா சமூகத்தின் ஆட்சியும்
முடிவுக்கு வந்து 1941 ஆம் ஆண்டு வரை காஷ்மீரில் முஸ்லிம்களை விட
இந்துக்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்துள்ளது.
இதுபோல, லடாக் பகுதியில்
புத்த சமயத்தினரும், கார்கிலில் முஸ்லிம்களின் ஷியா பிரிவினரும் அதிகம்
உள்ளனர். அதேநேரம் இப்பகுதிகளில் முஸ்லிம் களும் பரவலாக இருப்பதால் அங்கு
ஷியா மற்றும் புத்த சமயத்தினரால் அதன் சட்டப்பேரவைக்கு அதிகம் வர
முடிவதில்லை. மூன்றாவது முக்கியப் பகுதியான காஷ்மீரில் முஸ்லிம்கள்
அதிகமாகி அவர் களால் நடத்தப்படும் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக்
கட்சி (என்சி), மெகபூபா முப்தி யின் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி)
ஆகியவையே பலம் வாய்ந்ததாக உள்ளன. இதனால், அப்துல்லா அல்லது முப்தி
குடும்பத் தினரே அங்கு மாறி, மாறி கூட்டணி ஆட்சி செய்து வருவதும் மத்திய
அரசின் தலையீட்டில் இருந்து தப்ப முக்கிய காரணமாக உள்ளது.