அப்பு நம் லட்சக்கணக்கான உள்ளங்களில் வசிக்கிறார் - புனித் கடைசி பட ட்ரைலர் பார்த்து உருகிய பிரதமர் மோடி

கர்நாடக நடிகர் புனித் ராஜ்குமார் கடைசி திரைப்படம் ட்ரெய்லர் பார்த்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

Update: 2022-10-10 13:46 GMT

கர்நாடக நடிகர் புனித் ராஜ்குமார் கடைசி திரைப்படம் ட்ரெய்லர் பார்த்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக கடந்த 2021 அக்டோபர் 29ஆம் தேதி காலமானார். அவர் கடைசியாக காந்ததகுடி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் முடிந்த நிலையில் பெங்களூர் காந்திநகரில் உள்ள திரையரங்க நேற்று அதிகாலை படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது.

அதனை பார்த்த அவர் குடும்பம் கண்ணீர் விட்டு அழுதனர், அவரது ரசிகர்களும் ஆரவாரம் செய்தனர். இந்த ட்ரைலரை பிரதமர் நரேந்திர மோடியும் பார்த்துள்ளார். பார்த்தவுடன் பிரதமர் தனது ட்விட்டர் பதிவு மூலம் புனித் ராஜ்குமார் பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது 'லட்சக்கணக்கான உள்ளங்களில் அப்பு வசிக்கிறார். அவர் புத்திசாலித்தனத்தின் உருவமாகவும், சக்தியின் ஊற்றாகவும், இணையற்ற மேதையாகவும் இருந்தார். 'காந்ததகுடி' திரைப்படம் இயற்கை அன்னையின் கர்நாடகாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அழைத்த கௌரவம் இந்த முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்' என குறிப்பிட்டுள்ளார்.

Similar News