அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்சம் அணிவித்து,பூஜை செய்த அர்ஜுன் சம்பத்! கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த கே டி ராகவன்.!
அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்சம் அணிவித்து,பூஜை செய்த அர்ஜுன் சம்பத்! கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த கே டி ராகவன்.!
தஞ்சையில் பிள்ளையார்பட்டி பகுதியில் திருவள்ளுவருக்கு அமைக்கப்பட்ட சிலை மீது சில மர்ம நபர்கள் 3 நாட்கள் முன்பு சாணி வீசி சென்றுள்ளனர்.இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்,திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது தஞ்சாவூர் பகுதியில் பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், தஞ்சையில் அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை நேற்று மீண்டும் சுத்தம் செய்யப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு உரிய மரியாதை செலுத்தப்பட்டது.திருவள்ளுவர் சிலை அவமதிப்புக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தஞ்சையில் மர்ம நபர்களால் அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் அவமரியாதை செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு திருநீறு பூசி, ருத்ராட்சம் மாலை, காவித் துண்டு அணிவித்து பூஜை செய்தார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்ச மாலை, காவி துண்டு அணிவித்த அர்ஜூன் சம்பத்கைது செய்து தஞ்சை காவல்துறை நடவடிக்கை.
இது நடவடிக்கைக்கு K T ராகவன் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்,திருவள்ளுவருக்கு பூஜை செய்த அர்ஜுன் சம்பத் கைது ஆனால் சாணி அடித்தவனை கைது செய்யாமல் சந்தணம் பூசியவரை கைது செய்கிறீர்களேநல்ல வேடிக்கை என தெரிவித்துள்ளார்